நளைக்கும் நிலவு வரும்...
அந்த பாட்டியை அறியாதவர்கள் இருக்கமுடியாது. அனைவரது மனங்களிலும் அவள் நிறைந்து இருக்கிறாள். எல்லோரும் அவளைப்பற்றி ஒரே விதமாகவே சொல்வார்கள். அந்த அளவுக்கு அவள் பிரபல்யமாக இருந்தாள். எனது இரண்டரை வயது மகனுக்கே அவளைப் பற்றி தெரிந்திருக்கிறது. அவள் பேஸ்புக், டுவிட்டர் என்றெல்லாம் அவள் பிரபல்யம் அடையவில்லை. இருந்தாலும் அனைவருக்கும் அவளை தெரிந்திருக்கிறது. எனது இரண்டரை வயது மகனுக்கே அவளைப்பற்றி தெரிந்திருக்கிறது. நான் என் மகனின் வயதில் இருந்தபோதே அவளைப்பற்றி எனக்கும் தெரிந்திருந்தது. உலகமயமாக்கல், பின் நவீனத்துவும், மாக்ஸிஸம், புரொய்டிஸம், இஸ்லாமோபோபியா, வேல்டு டெரெரிஸம், வேல்டு இகொனொமி, சுனாமி, என்று எதுவும் அவளை பாதிக்கவுமில்லை. என்றும் போலவே அவள் இன்றும் தானுண்டு தன் தன் பாடு, தொழில் என இருந்து வருகிறாhள்.
எனது நண்பர் ஒருவர் வெளிநாட்டில் நல்ல வேலையில் இருக்கிறார். கை நிறைய சம்பளம் வாங்குகிறார். தான் மட்டுமென்று மட்டுமில்லாமால் பிறருக்கு உதவிகளையும் செய்து வருகிறார். ஆனாலும் அவரை ஊரவர்கள் நிறையப் பேருக்கு தெரியவில்லை. ஆனால் அவருக்கும் இந்த பாட்டியை தெரிந்திருந்தது.
ஆனால் இன்று அவள் எப்படி இருக்கிறாள்? அவளுக்கு எத்தனை பிள்ளைகள்? அவர்கள் ஏன் அவளை இந்த நிலைக்கு தள்ளினார்கள்? பெற்ற தாயை இப்படி வீதிக்கு விட அவர்களுக்கு எப்படி மனது வந்தது? அவளது கணவன் எப்படி இறந்தான்? என்ற கேள்விகள் எனக்கு அடிக்கடி மனதில் எழுகின்றது. நோன்பு நாட்களில் அவளும் வீடு வீடாய் திரிந்து அரிசி, பணம் என்று வாங்குவாளோ?.. இதெல்லாம் என் கண் முன்னே வந்து நிற்க எனது மகனே காரணம்,
'வாப்பா?...பாட்டிட கதய சொல்லுங்க!'
பாட்டியின் கதையை வாழையடி வாழையாக சொல்லிவந்தவர்களும், கதையில் டுவிஸ்ட் வைத்தவர்களும் கூட அவளைப்பற்றி அவ்வளவாக அக்கறைப்பட்டதாக தெரியவில்லை. ஆமா கதையில் டுவிஸ்ட் வைத்தார்கள். பாட்டி வடை சுட்டுக் கொண்டு இருந்தவேளை சமயம் பார்த்து வடையை திருடப்பார்த்த காகத்துக்கு விழுந்தது ஒரு அடி. பாட்டி காகத்தை தடியால் விரட்டி விட்டாள். சோகமாய் பறந்து வந்த காகம் மரத்தில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த நரி பாட்டியி;டம் போய் 'பாட்டி எனக்கு சரியான பசியாய் இருக்கிறது. விறகு பொறுக்கி தருகிறேன். வடை தருவாயா' என்று கேட்க அதற்கு பாட்டியும் சம்மதிக்க நரியும் ஒரு வடையை சம்பாதித்தது. திருட்டை விட்டு நரி உழைத்துச் சாப்பிட்ட கதை அது.
இவ்வளவெல்லாம் டுவிஸ்ட் வைத்தவர்கள் அவளுக்கு என்ன ஆனது என்று சொல்லவேயில்லை. ஆனால் அவர்கள் செய்ததெல்லாம் ஏமாற்றுப் பேர்வழியான நரியை உழைப்பின் சின்னமாக மாற்றியதுதான். அதுவே தற்போதய ஜனநாயக அரசியல் வழிமுறையாகவும் இருந்து வருகிறது. ஒரு பாட்டியின் வடைக்கதையிலேயே அரசியல் நடந்துள்ளது.
'வாப்பா?...பாட்டிட கதய சொல்லுங்க!'
எவ்லோரும் தங்கள் சொந்த இலாபங்களுக்காக பாட்டியை படாத பாடு படுத்தியிருக்கிறார்கள். இன்றும் அவள் பூரண நிலாவில் குந்தியிருந்து வடை சுட்டுக் கொண்டிருக்கிறாhள். சாதாரண மனிதர்களின் வெற்றுக் கண்களுக்கு புலப்பட்ட இந்த பாட்டியை எந்த வானியல் கருவிகளாலும் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்த சர்வலோகத்தின் நுட்பங்களையும் புதுமைகளையும் நவீன விஞ்ஞானம் இன்னும் முழுமையாக கண்டுபிடித்துவிட வில்லை என்பதற்கும், விஞ்ஞானம் தோற்றுப்போய் விட்டதற்கும் இதை விட வேறு என்னதான் சான்று சொல்ல முடியும்.
'வாப்பா?...பாட்டிட கதய சொல்லுங்க!'
ஒரு ஊர்லயாம் ஒரு பாட்டி வடசுட்டு வியாபாரம் செய்து வந்தாளாம். அவ ரொம்ப நல்ல பாட்டியாம். கொஞ்ச நாள் பாட்டி நிலாவுலயம் வட சுட்டு வித்து வந்தாங்களாhம். அவங்க வட சுட்டு வந்த இடத்துக்கு பக்கத்துலதான் அமெரிக்காக் காரன் டென்ட் அடிச்சு ஆராய்ச்சு பன்னினானாம். அவனுகள்தான் பாட்டியை அந்த இடத்தை விட்டு விரட்டினாங்களாம். மக்களை அவங்கட சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றும் வழமை அப்போதிருந்தே அவர்களுக்கு இருந்திருக்கிறது. பாவிகள்! பாட்டியை நிலாவில் கண்டதையும் அவர்கள் மறைத்து விட்டார்கள். ஏதோ அவர்கள் தான் நிலாவில் காலை வைத்தததாக ஊருக்கும் மக்களுக்கு கதை சொல்லி விட்டார்கள். அங்கிருந்து மிகவும் சிரமப் பட்டு இங்க வந்த பாட்டியை மாமூல் கேட்டும் கடையை கொள்ளையடித்தும் அவளை கஷ்டப்படுத்தியிருக்கிறார்கள் இந்த ஊரிலுள்ள காகங்களும் நரிகளும். இவ்வளவும் செய்து விட்டு 'உழைப்பின் சிகரம்' என்ற அடைமொழிகூட வைத்துக் கொண்டு சுற்றித்திரிகிறார்கள். இந்த ஊர் மக்களும் பாவம் எத்தனைபேர்தான் அவர்களை நம்பவைத்து கழுத்தறுப்பார்கள். அதனால்தான் இந்த மக்களுக்கு பாட்டியின் மீது யாருக்கும் பரிதாபமோ இரக்கமோ ஏற்படவில்லை.
ஆண்டவன் பொறுமையாளிகளை கைவிடுவதில்லை. இத்தனை காலமும் வடைசுட்டு விற்று சிறிது சிறிதாக பாட்டி பணம் சேர்த்து வந்தாள். இன்னும் அவள் தெம்பாகவே இருக்கிறாள். தான் சேர்த்து வைத்திருந்த பணத்தையெல்லாம் வைத்து பாட்டி ஹஜ் யாத்திரை சென்று வரலாம் என்று முடிவு செய்தாள். 'ஆண்டவனே! என்ட உசிரு அந்த புனித மண்ணுலதான் போகனும்' என்று எப்போதும் துஆ செய்வாள். ஆனால் அவள் சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்து ஹஜ் பயணம் போக முடியாது என்று சொல்லி விட்டார்கள் இந்த ஊரின் ஏஜென்ஸிக்காரர்கள். அது மட்டுமில்லாமல் அதற்கு இப்போது 'அப்லிகேசன்' அது இது என்று நிறைய சிக்கல்களை சொல்லிக்காட்டி அவளை மனம் தளர வைத்தார்கள். இருந்தாலும் தைரியமும் மனவுறுதியும் கொண்ட பாட்டி தன் முடிவை மாற்றிக் கொண்டாள்.
தான் சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு 'உம்றா' செல்ல முடிவெடுத்து இப்போது அவள் உம்றா சென்றிருக்கிறாள்' என்று நான் சொல்லி முடிக்க எனது மகன் தூங்கிவிட்டிருந்தான்.
இனி நாளைக்கும் அவன் கதை கேட்பான். எப்போதும் போல கதையை முடிக்க முன்பே அவன் தூங்கி விடுவான். இப்படியே நாம் வாழ்வு தொடரப்போகிறது...
அந்த பாட்டியை அறியாதவர்கள் இருக்கமுடியாது. அனைவரது மனங்களிலும் அவள் நிறைந்து இருக்கிறாள். எல்லோரும் அவளைப்பற்றி ஒரே விதமாகவே சொல்வார்கள். அந்த அளவுக்கு அவள் பிரபல்யமாக இருந்தாள். எனது இரண்டரை வயது மகனுக்கே அவளைப் பற்றி தெரிந்திருக்கிறது. அவள் பேஸ்புக், டுவிட்டர் என்றெல்லாம் அவள் பிரபல்யம் அடையவில்லை. இருந்தாலும் அனைவருக்கும் அவளை தெரிந்திருக்கிறது. எனது இரண்டரை வயது மகனுக்கே அவளைப்பற்றி தெரிந்திருக்கிறது. நான் என் மகனின் வயதில் இருந்தபோதே அவளைப்பற்றி எனக்கும் தெரிந்திருந்தது. உலகமயமாக்கல், பின் நவீனத்துவும், மாக்ஸிஸம், புரொய்டிஸம், இஸ்லாமோபோபியா, வேல்டு டெரெரிஸம், வேல்டு இகொனொமி, சுனாமி, என்று எதுவும் அவளை பாதிக்கவுமில்லை. என்றும் போலவே அவள் இன்றும் தானுண்டு தன் தன் பாடு, தொழில் என இருந்து வருகிறாhள்.
எனது நண்பர் ஒருவர் வெளிநாட்டில் நல்ல வேலையில் இருக்கிறார். கை நிறைய சம்பளம் வாங்குகிறார். தான் மட்டுமென்று மட்டுமில்லாமால் பிறருக்கு உதவிகளையும் செய்து வருகிறார். ஆனாலும் அவரை ஊரவர்கள் நிறையப் பேருக்கு தெரியவில்லை. ஆனால் அவருக்கும் இந்த பாட்டியை தெரிந்திருந்தது.
ஆனால் இன்று அவள் எப்படி இருக்கிறாள்? அவளுக்கு எத்தனை பிள்ளைகள்? அவர்கள் ஏன் அவளை இந்த நிலைக்கு தள்ளினார்கள்? பெற்ற தாயை இப்படி வீதிக்கு விட அவர்களுக்கு எப்படி மனது வந்தது? அவளது கணவன் எப்படி இறந்தான்? என்ற கேள்விகள் எனக்கு அடிக்கடி மனதில் எழுகின்றது. நோன்பு நாட்களில் அவளும் வீடு வீடாய் திரிந்து அரிசி, பணம் என்று வாங்குவாளோ?.. இதெல்லாம் என் கண் முன்னே வந்து நிற்க எனது மகனே காரணம்,
'வாப்பா?...பாட்டிட கதய சொல்லுங்க!'
பாட்டியின் கதையை வாழையடி வாழையாக சொல்லிவந்தவர்களும், கதையில் டுவிஸ்ட் வைத்தவர்களும் கூட அவளைப்பற்றி அவ்வளவாக அக்கறைப்பட்டதாக தெரியவில்லை. ஆமா கதையில் டுவிஸ்ட் வைத்தார்கள். பாட்டி வடை சுட்டுக் கொண்டு இருந்தவேளை சமயம் பார்த்து வடையை திருடப்பார்த்த காகத்துக்கு விழுந்தது ஒரு அடி. பாட்டி காகத்தை தடியால் விரட்டி விட்டாள். சோகமாய் பறந்து வந்த காகம் மரத்தில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த நரி பாட்டியி;டம் போய் 'பாட்டி எனக்கு சரியான பசியாய் இருக்கிறது. விறகு பொறுக்கி தருகிறேன். வடை தருவாயா' என்று கேட்க அதற்கு பாட்டியும் சம்மதிக்க நரியும் ஒரு வடையை சம்பாதித்தது. திருட்டை விட்டு நரி உழைத்துச் சாப்பிட்ட கதை அது.
இவ்வளவெல்லாம் டுவிஸ்ட் வைத்தவர்கள் அவளுக்கு என்ன ஆனது என்று சொல்லவேயில்லை. ஆனால் அவர்கள் செய்ததெல்லாம் ஏமாற்றுப் பேர்வழியான நரியை உழைப்பின் சின்னமாக மாற்றியதுதான். அதுவே தற்போதய ஜனநாயக அரசியல் வழிமுறையாகவும் இருந்து வருகிறது. ஒரு பாட்டியின் வடைக்கதையிலேயே அரசியல் நடந்துள்ளது.
'வாப்பா?...பாட்டிட கதய சொல்லுங்க!'
எவ்லோரும் தங்கள் சொந்த இலாபங்களுக்காக பாட்டியை படாத பாடு படுத்தியிருக்கிறார்கள். இன்றும் அவள் பூரண நிலாவில் குந்தியிருந்து வடை சுட்டுக் கொண்டிருக்கிறாhள். சாதாரண மனிதர்களின் வெற்றுக் கண்களுக்கு புலப்பட்ட இந்த பாட்டியை எந்த வானியல் கருவிகளாலும் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்த சர்வலோகத்தின் நுட்பங்களையும் புதுமைகளையும் நவீன விஞ்ஞானம் இன்னும் முழுமையாக கண்டுபிடித்துவிட வில்லை என்பதற்கும், விஞ்ஞானம் தோற்றுப்போய் விட்டதற்கும் இதை விட வேறு என்னதான் சான்று சொல்ல முடியும்.
'வாப்பா?...பாட்டிட கதய சொல்லுங்க!'
ஒரு ஊர்லயாம் ஒரு பாட்டி வடசுட்டு வியாபாரம் செய்து வந்தாளாம். அவ ரொம்ப நல்ல பாட்டியாம். கொஞ்ச நாள் பாட்டி நிலாவுலயம் வட சுட்டு வித்து வந்தாங்களாhம். அவங்க வட சுட்டு வந்த இடத்துக்கு பக்கத்துலதான் அமெரிக்காக் காரன் டென்ட் அடிச்சு ஆராய்ச்சு பன்னினானாம். அவனுகள்தான் பாட்டியை அந்த இடத்தை விட்டு விரட்டினாங்களாம். மக்களை அவங்கட சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றும் வழமை அப்போதிருந்தே அவர்களுக்கு இருந்திருக்கிறது. பாவிகள்! பாட்டியை நிலாவில் கண்டதையும் அவர்கள் மறைத்து விட்டார்கள். ஏதோ அவர்கள் தான் நிலாவில் காலை வைத்தததாக ஊருக்கும் மக்களுக்கு கதை சொல்லி விட்டார்கள். அங்கிருந்து மிகவும் சிரமப் பட்டு இங்க வந்த பாட்டியை மாமூல் கேட்டும் கடையை கொள்ளையடித்தும் அவளை கஷ்டப்படுத்தியிருக்கிறார்கள் இந்த ஊரிலுள்ள காகங்களும் நரிகளும். இவ்வளவும் செய்து விட்டு 'உழைப்பின் சிகரம்' என்ற அடைமொழிகூட வைத்துக் கொண்டு சுற்றித்திரிகிறார்கள். இந்த ஊர் மக்களும் பாவம் எத்தனைபேர்தான் அவர்களை நம்பவைத்து கழுத்தறுப்பார்கள். அதனால்தான் இந்த மக்களுக்கு பாட்டியின் மீது யாருக்கும் பரிதாபமோ இரக்கமோ ஏற்படவில்லை.
ஆண்டவன் பொறுமையாளிகளை கைவிடுவதில்லை. இத்தனை காலமும் வடைசுட்டு விற்று சிறிது சிறிதாக பாட்டி பணம் சேர்த்து வந்தாள். இன்னும் அவள் தெம்பாகவே இருக்கிறாள். தான் சேர்த்து வைத்திருந்த பணத்தையெல்லாம் வைத்து பாட்டி ஹஜ் யாத்திரை சென்று வரலாம் என்று முடிவு செய்தாள். 'ஆண்டவனே! என்ட உசிரு அந்த புனித மண்ணுலதான் போகனும்' என்று எப்போதும் துஆ செய்வாள். ஆனால் அவள் சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்து ஹஜ் பயணம் போக முடியாது என்று சொல்லி விட்டார்கள் இந்த ஊரின் ஏஜென்ஸிக்காரர்கள். அது மட்டுமில்லாமல் அதற்கு இப்போது 'அப்லிகேசன்' அது இது என்று நிறைய சிக்கல்களை சொல்லிக்காட்டி அவளை மனம் தளர வைத்தார்கள். இருந்தாலும் தைரியமும் மனவுறுதியும் கொண்ட பாட்டி தன் முடிவை மாற்றிக் கொண்டாள்.
தான் சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு 'உம்றா' செல்ல முடிவெடுத்து இப்போது அவள் உம்றா சென்றிருக்கிறாள்' என்று நான் சொல்லி முடிக்க எனது மகன் தூங்கிவிட்டிருந்தான்.
இனி நாளைக்கும் அவன் கதை கேட்பான். எப்போதும் போல கதையை முடிக்க முன்பே அவன் தூங்கி விடுவான். இப்படியே நாம் வாழ்வு தொடரப்போகிறது...