Thursday, April 30, 2009

மைமூன் கோழி

அண்டசராசங்களையும் கற்றுத் தேர்ந்த கலாநிதி நந்தலாலாவுக்கு திடீரென்று இது உதயமானது.
“நம்ம பெண்பிள்ளைகளுக்கு சிறந்த பாலியல் கல்வி ஆசிரியன் நம்ம வீட்டு நாட்டுக் கோழி''

(வாசகர்கள் பின்வருமாறு கருதிவிடக்கூடும்) சொல்லப்போனால் அது ஒன்றும் பெரிய வித்தை கிடையாது. இந்தக் காலத்தில் அதற்குப் பெரிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை. வீட்டிலிருந்தே பிள்ளைகள் அனைத்தையும் கற்றுவிடுகிறார்கள். வெள்ளித்திரைகள் அவற்றை வெள்ளமாக அள்ளித்தருகிறது. அனைவரும் அதனை சுனாமியாக நடைமுறைப்படுத்துகிறார்கள்.-
“நம்ம பெண்பிள்ளைகளுக்கு சிறந்த பாலியல் கல்வி ஆசிரியன் நம்ம வீட்டு நாட்டுக் கோழிசந்திரலேகா பின்வருமாறு திருவுளமானாள்! (தீவிர மதப்பற்றர்களின் கவனத்திற்கு:- கலாநிதி நந்தலாலா எவ்வளவு படித்திருந்தாலும் படிக்காத தன்மனைவியை மேதையாகவும், கண்ணியத்திற்குரியவளாகவும் கருதுகிறார். எனவேதான் கூறினாள், சொன்னாள் போன்ற வர்த்தைகளை அவர் சந்திரலேகாவுக்கு உபயோகிப்பதில்லை,)
:- அப்ப புரொய்லர் கோழி..
நந்தலாலா சொன்னார்:- விளையாடாத புள்ள..இது சீரியசான விசயம்.. “நம்ம பெண்பிள்ளைகளுக்கு சிறந்த பாலியல் கல்வி ஆசிரியன் நம்ம வீட்டு நாட்டுக் கோழி''
:-எப்பிடி
:- குட்…இது அறிவுள்ளவர்களின் தெரிவு..
எங்கள் வீட்டுக் கோழி மைமூன்…வாங்கி வளர்த்தோம். கூடவே அதன் மச்சானையும்..எங்கட வீட்டுக்கு வந்தப்பிறகுதான் அவங்களுக்கு கலியானமே நடந்தது.
எங்கள் வீட்டிலிருந்து எப்போதும் லைவ் அப்டேட் கிடைக்கும்.
உம்மா:- அவன் இன்டைக்கு மைமூன மிரிக்கிறதுக்கெண்டு துரத்தித் துரத்திக் கொத்திப்போட்டான். மைமூன தூக்கி ரெண்டு நாளைக்கு அடச்சி வக்கனும்..
தங்கச்சி சொல்லுவா:- அன்டும் இப்பிடித்தான்..நமக்கென்ன..பிறகு எப்பிடி மைமூன் முட்ட தருவா?..
நந்தலாலா ~~ஒவ்வொரு வீட்டிலும் நாட்டுக் கோழி வளர்த்ததால்தான்..நம்முன்னோர்கள் பாலியல் கல்வியை அவர்களின் பிள்ளைகளுக்கு ஊட்டினார்கள்..சேவல், போடு..கோழிமிரித்தல்..அடைகாத்தல்..முட்டை போடல்..அடைவைத்தல்..அடைகாத்தல்..குஞ்சு பொரித்தல்..ப்பா..ஒரு வாழ்க்கைச் சக்கரமே உருள்கிறது..
உங்கட டீச்சர் லோகமாதாவின் பாஷையில் ~இது முறை சாராக் கல்வி..''
சந்திரலோகா இடைமறித்தார்: அவ என்ன பாவம் செஞ்சா..
மைமூனுக்கு நாலு பிள்ளைகள் இருந்தார்கள்..ஒரு சேவல்..அவனுக்கு பெயரில்லை..எப்பவும் வாடா போடாதான்..எல்லா போட்டுக் கோழிகளும் மைமூன்தான். அந்த காலத்தில ராஜாக்களின் ஒரே மாதிரியான பெயரை முதலாம்..இரண்டாம்..மூன்றாம் என்று சொல்லுவாங்களே..அது மாதிரி..
ஆண் பெண் உறவு பற்றிய எவ்வளவு சூசகமாக பரம்பரை பரம்பரையாக கடத்தி வந்து..ம்ஹம்…புரொய்லர் கோழிகளின் வருகை நம் அறிவின் பாரம்பரியத்தை தடுத்தி நிறுத்தியுள்ளன..மலிவாகக் கிடைப்பதும்..விரைவில் வளர்ந்து விடுவதையும் பார்த்து…சொக்கிப் போய் நிற்கிறார்கள்..
சந்திரலேகா: இன்டக்கி கோழிதான் நம்ம வீட்டுலயும்…
(வாசகர்கள் மீண்டும் இப்படி நினைப்பர்) சொல்லப்போனால் அது ஒன்றும் பெரிய வித்தை கிடையாது. இந்தக் காலத்தில் அதற்குப் பெரிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை. வீட்டிலிருந்தே பிள்ளைகள் அனைத்தையும் கற்றுவிடுகிறார்கள். வெள்ளித்திரைகள் அவற்றை வெள்ளமாக அள்ளித்தருகிறது. அனைவரும் அதனை சுனாமியாக நடைமுறைப்படுத்துகிறார்கள்.
நந்தலாலா:- ~நாட்டுக் கோழி வீட்டில் இருக்கும் போது..அவற்றின் அன்றாட வேலைகள் பற்றிய அப்டேட் வீடுகளிள் பெண்களிடையே பேசப்படுகிறது. தொலைக்காட்சிகளில் ஆபாசமே சொல்லப்படும்..முறையான பாலியல் கல்வியை மனிதனுக்கு நாட்டுக் கோழிகளால் மட்டுமே கொடுக்க முடியும்..தொலைக்காட்சிகளில் வரும் ஆபாசக் காட்சிகள் பற்றி வீட்டிலுள்ள பெண்கள் விலாவாரியாக பேசுவதில்லை…நாட்டுக் கோழி பற்றிதான் பேசுவார்கள்..
இது பற்றிய ஆய்வு மண்றங்கள் நடத்தப்பட வேண்டும்..நூல்கள் வெளிவர வேண்டும்..என்று ஆசைதான்..எங்க நாம சொன்ன யாரு கேட்கப் போறா..ஒவ்வொரு அதிபருக்கும் 100 நாட்டு முட்டைகள் கொடுத்து அவர்களை இதற்கு ஊக்கமளிக்க சொல்ல வேண்டும்…ஒவ்வொரு பாடசாலை மாணவ மாணவிக்கு ஒரு நாட்டுக் கோழி..~2010ம் ஆண்டில் அனைவரிடம் நாட்டுக் கோழி” அந்த திட்டத்திற்கு இந்தப் பெயரை வச்சா நல்லா இருக்கும்..டீவி கொமர்சியல்ஸ், பேப்பர் விளம்மபரம் என்று நாட்டுக் கோழி வளர்ப்புக்கு ஊக்க மளிக்க வேண்டும்..
இந்த இடத்தில் சிந்திப்பதை நிறுத்திய நந்தலாலா..மறுபடியும் சிந்திக்கலானார்..
~~இந்த திட்டத்திற்கு அரசும், குடும்பக்கட்டுப்பாட்டு அமைப்புகளும் தடைவிதிக்குமோ..''
சந்திரலேகா:- கோழிக்குத்தான் முதல்ல பறவக்காச்சலாம்..நாட்டுக் கோழிக்கும் வரும்..2010ல் அனைவரிடம் நாட்டுக் கோழி..அதே வீட்டில் அனைவருக்கும் பறவைக்காய்ச்சல்..
~அப்படியானால்..நம் நாட்டுக் கோழிவளர்ப்புத் திட்டத்திற்கு சர்வதேச மட்டத்தில் எதிர்ப்பு இருக்கிறது..முதலில் எந்தெந்த நாடுகள் இந்த கோழி வளர்ப்பை தடைசெய்யலாம் என்று பாhடதடது அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் செய்ய வேண்டும்..சமரச உடன்பாட்டுக்கு வந்து..இதனை நடைமுறைப்படுத்தலாம்..ஆனால் இதற்று அரச உதவி தேவைப்படும்..உபாத்தியாயினி லோகமாதா இது பற்றிய சிறந்த ஆலொசனைகளை தருவார்..
சட்டென்று சிந்திப்பதை நிறுத்திய கலாநிதி அறிவாளியும் அழகியும் தன் மனைவியுமாகிய சந்திரலேகாவிடம்..டீச்சர்ர வீட்ட போயிட்டு வருவமா..
~அவ மாமியாட வீட்ட போயிட்டாவாம்..சாப்பாடாம்..50 கோழியாம்..ஓடர் குடுத்து சமைக்காங்களாம்..
~இது மிகப் பெரிய திட்டம்..உபகாரமானதும் கூட..புரொய்லர் கோழி தின்னும் அரச தனியார் அதிகாரிகள் இதனை ஆதரிப்பார்களா?..
அரசு யுத்தம் முடியட்டும் என்று சொல்லி விடும்..அரச அதிகாரிகள் இதற்கான மேலதிக அலவன்ஸ் கேட்பார்கள்..கொடுக்காது விட்டால் ஸ்ரைக்..அந்தப் பாவம் நம்ம தலையில் வந்து விடும்..தனியார் ஊழியர்களை கேட்க முடியாது..கம்பனி வேலைக்கு வெளியே அவர்களால் கோழி வளர்க்க முடியாது..வளர்த்தால் வேறு கம்பனிக்கு கோழி வளர்த்தான் என்று சொல்லி வேலையை விட்டு தூக்கி விடுவார்கள்..வீட்டு எஜமானிகளுக்கு வீட்டில் இடமில்லை..இளம் பெண்களுக்கு கோழிச்சாணம் பிடிக்காது..
ஒரு கோழிவளப்புத்திட்டத்தில் இத்தனை பிரச்சனைகளா..வேண்டாம் என்று நினைத்த கலாநிதி..ஒரு கதையை கதையை எழுதிவிடலாம் என்று நினைத்து..எழுதி முடித்ததார்..
“நம்ம பெண்பிள்ளைகளுக்கு சிறந்த பாலியல் கல்வி ஆசிரியன் நம்ம வீட்டு நாட்டுக் கோழி’’
முற்றிற்று 2009.05.01

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP